ஜெயலலிதா பிரதமராக தேவகவுடா ஆதரவு
திருச்சி: தென்னிந்தியாவில் இருந்து ஜெயலலிதா பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் வரவேற்பேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்கத் தயாராக இல்லை.

நரசிம்மராவ், எனக்கு அடுத்து தென்னிந்தியாவில் இருந்து யாரும் பிரதமர் பதவியில் அமரவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன்.
மாநில கட்சிகள் ஒத்த கருத்துக்களுடன், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கொள்கைகளை கொண்டவையாக இருந்தால், மக்கள் அவற்றை வரவேற்பார்கள். அதுபோன்ற நேரத்தில் முன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை காட்டுகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசியலில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் பொது வாழ்வில் புது அறிமுகம். பண பலம், சாதி, மதம் ஆகியவற்றை மீறி காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை தோற்கடித்து அரசியலில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications