ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றம்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள பிசியோதெரபி நிபுணர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்து நேற்றுடன் 40 நாட்கள் ஆகிறது.
கடந்த 3 நாட்களாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் செயற்கை சுவாச சிகிச்சையை மாற்றும் வகையில் அவரது தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள குழாயை அகற்றிவிட்டு அவரை இயற்கையாக சுவாசிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications