ஜெ. சுயநினைவோடு கைரேகை வைத்தார்... சசிகலா உடனிருந்தார் - டாக்டர் பாலாஜி
வேட்பாளரின் வேட்புமனுவில் ஜெயலலிதா சுயநினைவோடு கைரேகை வைத்தார் என்றும் அப்போது தம்முடன் சசிகலாவும் உடன் இருந்தார் என்றும் டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: வேட்புமனுவில் கைரேகை வைத்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி சாட்சியம் அளித்துள்ளார். ஜெயலலிதா கைரேகை வைத்த போது தாமும், சசிகலாவும் மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இடம் பெற்றிருந்தது.
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். எம்எல்ஏ போஸின் வேட்பு மனுவில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

சந்தேகம் எழுப்பிய சரவணன்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அமைத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரண கமிஷன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது விசாரணையைத்தொடங்கியுள்ளது.

சுயநினைவோடு இருந்தாரா?
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை ஆணையத்திடமும் இது தொடர்பான ஆவணங்களை சரவணன் அளித்திருந்தார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் சரவணன் குறிப்பிட்டிருந்தார்.

விளக்கம் சொன்ன டாக்டர் பாலாஜி
இந்நிலையில் மருத்துவர் சரவணனின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜி இன்று ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி 3 மணி நேரம் விளக்கம் அளித்தார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்ததாக கூறினார்.

உடன் இருந்த சசிகலா
வேட்புமனுவில் ஜெயலிதா கைரேகை வைத்த போது சுயநினைவோடுதான் இருந்தார் என்றும் தான் கைரேகை பெறும் போது சசிகலாவும் தம்முடன் இருந்தார் என்றும் விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி சாட்சியம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கைரேகை ஒப்பிட்டு பார்க்க முடிவு
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை அரசு மருத்துவக்குழுவோ, அமைச்சர்களோ பார்க்கவில்லை என்றும் டாக்டர் பாலாஜி தெரிவித்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பதிவாகியுள்ள ஜெயலலிதாவின் கைரேகையுடன் ஒப்பிட ஆணையம் திட்டமிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications