For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சுயநினைவோடு கைரேகை வைத்தார்... சசிகலா உடனிருந்தார் - டாக்டர் பாலாஜி

வேட்பாளரின் வேட்புமனுவில் ஜெயலலிதா சுயநினைவோடு கைரேகை வைத்தார் என்றும் அப்போது தம்முடன் சசிகலாவும் உடன் இருந்தார் என்றும் டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ.கைரேகை சர்ச்சை...ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் டாக்டர் பாலாஜி விளக்கம்- வீடியோ

    சென்னை: வேட்புமனுவில் கைரேகை வைத்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி சாட்சியம் அளித்துள்ளார். ஜெயலலிதா கைரேகை வைத்த போது தாமும், சசிகலாவும் மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்தார்.

    அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இடம் பெற்றிருந்தது.

    திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். எம்எல்ஏ போஸின் வேட்பு மனுவில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

    சந்தேகம் எழுப்பிய சரவணன்

    சந்தேகம் எழுப்பிய சரவணன்

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அமைத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரண கமிஷன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது விசாரணையைத்தொடங்கியுள்ளது.

    சுயநினைவோடு இருந்தாரா?

    சுயநினைவோடு இருந்தாரா?

    இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை ஆணையத்திடமும் இது தொடர்பான ஆவணங்களை சரவணன் அளித்திருந்தார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் சரவணன் குறிப்பிட்டிருந்தார்.

    விளக்கம் சொன்ன டாக்டர் பாலாஜி

    விளக்கம் சொன்ன டாக்டர் பாலாஜி

    இந்நிலையில் மருத்துவர் சரவணனின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜி இன்று ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி 3 மணி நேரம் விளக்கம் அளித்தார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்ததாக கூறினார்.

     உடன் இருந்த சசிகலா

    உடன் இருந்த சசிகலா

    வேட்புமனுவில் ஜெயலிதா கைரேகை வைத்த போது சுயநினைவோடுதான் இருந்தார் என்றும் தான் கைரேகை பெறும் போது சசிகலாவும் தம்முடன் இருந்தார் என்றும் விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி சாட்சியம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கைரேகை ஒப்பிட்டு பார்க்க முடிவு

    கைரேகை ஒப்பிட்டு பார்க்க முடிவு

    அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை அரசு மருத்துவக்குழுவோ, அமைச்சர்களோ பார்க்கவில்லை என்றும் டாக்டர் பாலாஜி தெரிவித்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பதிவாகியுள்ள ஜெயலலிதாவின் கைரேகையுடன் ஒப்பிட ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    English summary
    Dr Balaji appeared before the Arumugasamy commission and gave evidence for more than 3 hours.The thumb impression of Jayalalithaa was conscious with Sasikala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X