தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையில்லை... மாஃபா பாண்டியராஜன்
தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தகவல்கள் பரவியதை அடுத்து கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று திங்கட்கிழமை வழக்கம் போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து காரணமாக சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 2 மாதங்களுக்கும் மேலாக அவருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் பூரண குணம் அடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும், அதிமுக செய்தித் தொடர்பாளர்களும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ஞாயிறு மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை அதிமுக தொண்டர்களிடமும் அரசியல் வட்டாரத்திலும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் பலத்த பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று தகவல்கள் பரவத் தொடங்கின. இதனை தமிழக கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மறுத்துள்ளார். மேலும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications