ஒரே மேடையில் 20 வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய ஜெயலலிதா.. பிரச்சாரத்தையும் தொடங்கினார் !
சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சென்னை, பெரம்பூர் கொளத்துார், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), உள்பட 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் சமீபத்தில் வேட்பாளர்களை அறிவித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நேற்று மாலை சென்னை தீவுத் திடலில் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.
ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்த வேட்பாளர் விவரம்:
பி.வெற்றிவேல் - பெரம்பூர்
ஜே.சி.டி.பிரபாகர் - கொளத்தூர்
தாடி மா.இராசு - வில்லிவாக்கம்
வ.நீலகண்டன் - திருவிக. நகர்
பரிதி இளம்வழுதி - எழும்பூர் ,
டி.ஜெயக்குமார் - ராயபுரம்
கே.எஸ்.சீனிவாசன் - துறைமுகம்
நூர்ஜகான் - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
பா.வளர்மதி - ஆயிரம்விளக்கு
எஸ்.கோகுல இந்திரா - அண்ணாநகர்
விருகை ரவி - விருகம்பாக்கம்
சி.பொன்னையன் - சைதாப்பேட்டை
தி.நகர் பி.சத்தியா - தியாகராயநகர்,
ஆர்.நடராஜ் - மயிலாப்பூர்
நீலாங்கரை எம்.சி. முனுசாமி - வேளச்சேரி
லியோ என்.சுந்தரம் - சோழிங்கநல்லூர்
பண்ருட்டி ராமச்சந்திரன் - ஆலந்தூர்
பெஞ்சமின் - மதுரவாயல்
தட்சிணாமூர்த்தி - மாதவரம்
பி.பால்ராஜ் - திருவொற்றியூர்