முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்: சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை : முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் அறிக்கை மட்டுமே மக்களுக்கு அளிக்கப்படுகிறது.

Jayalalithaa now fine says Seeman

கடந்த 1ம் தேதியன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் சிகிச்சை பெறுவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அறிக்கை வெளியிட்டார். இதன் பின்னர் முக்கிய அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், தா.பாண்டியன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நிலையில் இன்று காலையில் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசியதாக கூறிய சீமான், அவர் நலமுடன் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக முதல்வரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அமைச்சர்கள் கூறினார். இதுதான் நம்பிக்கைக்கு உரியது. அதிகாரப்பூர்வமானது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+