கட்டிட விபத்துக்கு காரணமானவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. ஜெ. உறுதி
சென்னை: போரூர் கட்டிட விபத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தக் கோர விபத்து குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப்படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இரவு நேர மீட்புப்பணிகளை மேற்கொள்ள மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான உபகரணங்களுடன் தொழில்நுட்ப பணியாளர்கள் அனுப்பப்பட் டுள்ளனர்.
விபத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
- இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications