ஜெயலலிதாவை நலம் விசாரிக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி?
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இவரது உடல்நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அப்போல்லோ சென்றனர்.
டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி திடீரென்று சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்துக் சென்றார். மேலும், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரும் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்து விட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பங்கேற்றுள்ளதால், இன்று மாலையில் அவர் சென்னை வரலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.












Click it and Unblock the Notifications