ஜெயலலிதா உடல்நிலை..- உண்மை அறிக்கை வெளியிட ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக் கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மையான அறிக்கை வெளியிட கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிட வேண்டும். முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications