ஜெயலலிதாவின் மதுவிலக்கு அறிவிப்பு ஏமாற்று வேலை: மு.க.ஸ்டாலின், திருமா கருத்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மதுவிலக்கு அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் அது ஏற்புடையதல்ல என்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூறியுள்ளனர்.
சென்னையில் நேற்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த உள்ளதாக வாக்குறுதி அளித்தார். இதனை ஆதரித்தும், எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில் ஜெயலலிதா அறிவித்துள்ள படிப்படியான மதுவிலக்கு என்பது ஏமாற்று வேலை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அதேசமயம் இது மக்களை ஏமாற்றும் முயற்சியாக இருக்கலாம் என்றும், அவரது பேச்சில் நம்பகத்தன்மையை காண முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜெயலலிதா அச்சத்திற்கு ஆளகியுள்ளதாலே மதுவிலக்கு பற்றி அறிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரே கையெழுத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார், அதேபோல் தமிழகத்தின் ஏன் அமல்படுத்த முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications