டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்! விலை நிர்ணய அதிகாரத்தைத் திரும்பப் பெற ஜெ. வலியுறுத்தல்!!
சென்னை: டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணய அதிகாரத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் முக்கிய கவனமே உணவுப் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தான் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறிய ஓரிரு நாட்களிலேயே, விலைவாசியை உயர்த்தும் வகையில், இன்று முதல் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தியுள்ளது வேதனை அளிக்கிறது.
இந்த விலை உயர்வு காரணமாக, ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற தனியார் வாகனக் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மாணவ- மாணவியர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை எளிய பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடுதல் வாகனக் கட்டணம் செலுத்த வேண்டிவரும். இது மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டீசல் விலை என்பது சரியான விலை நிர்ணயம் அல்ல. முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையை முற்றிலும் மாற்றி அமைத்து, வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை; அதனை இங்கு சுத்திகரிக்க ஆகும் செலவு; உள் நாட்டிலேய உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை எடுக்க ஆகும் செலவு மற்றும் அதனைச் சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு; பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் ஓரளவு குறைக்கப்படு வதோடு, விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்படும்.
எனவே, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் உயர்ந்து கொண்டே செல்லும் விலை வாசியை ஓரளவு கட்டுப்படுத்தவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணய அதிகாரத்தை திரும்பப் பெறவும், தற்போதுள்ள பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தை மாற்றி அமைக்கவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தற்போதைய மத்திய அரசின் இந்த நடவடிக்கை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளை மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து கடைபிடிப்பதாகவே உள்ளது.
எது எப்படியோ, தற்போதைய டீசல் விலை உயர்வு, மாற்றம் மூலம் ஏற்றம் காணலாம் என்று நினைத்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பாரதப் பிரதமர் இதில் தலையிட்டு, இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications