அப்பல்லோவில் காவிரி பிரச்சினையை அதிகாரிகளுடன் ஆலோசித்தார் ஜெ., - ஆர்டிஐ விளக்கம்
ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்படுவதற்கு முன்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக ஆர்.டி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5 ஆம் தேதி வரை சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா இதய முடக்கம் ஏற்பட்டு மரணமடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது அரசு.

தகவல் அறியும் உரிமை சட்டம்
இந்த நிலையில், இதுதொடர்பாக சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் பெற்றுள்ளார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை
அவருக்கு தகவல் ஆணையம் அனுப்பிய விளக்கத்தில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது காவிரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்மோ கருவி சிகிச்சை
ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்னதாக அவருக்கு தவறான மருந்துகள் தரப்பட்டதாக கூறுவது அவதுறான தகவல். ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்படுவதற்கு முன்பாக இதுதொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

மருத்துவ செலவு
ஜெயலலிதாவின் மருத்துவச் செலவுக்காக அரசு சார்பில் பணம் எதுவும் செலவிடப்படவில்லை என்றும் ஆர்டிஐ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனக்கு எந்த விதமான தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில் எக்மோ கருவி அகற்றப்பட்டது குறித்து ஓபிஎஸ்க்கு தெரியும் என்று ஆர்டிஐ விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications