இலங்கை சிறையில் வாடும் 35 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை- பிரதமருக்கு முதல்வர் ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் வாடும் 35 தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலே இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதங்களை அனுப்பி வருகிறார்.
இந்நிலையில் அக்டோபர் 1-ந் தேதியன்று 7 நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா, இலங்கை சிறையில் வாடும் 35 தமிழக மீனவர்கள் மற்றும் 31 படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications