ஏழாவது முறையாக அதிமுக பொதுச் செயலராகும் ஜெயலலிதா!
அதிமுக பொதுச் செயலாளராக ஏழாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்தத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து 2,467 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.

இந்த விருப்ப மனுக்களின் கட்டணமாக மட்டுமே, ரூ.6 கோடியே 15 லட்சம் பெறப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் உள்கட்சித் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்தல் ஆணையராக கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஞாயிற்றுக் கிழமையோடு நிறைவடைந்தது.
இதுவரை முதல்வர் ஜெயலலிதா மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே ஜெயலலிதா போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 29-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆறு முறை பொதுச் செயலாளராக ஜெயலலிதா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications