சொத்து குவிப்பு: அப்பீல் மனு மீது பிப்ரவரியில் தீர்ப்பு- ஜெ.வுக்கு மீண்டும் சிறை: சு.சுவாமி ஆரூடம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது பிப்ரவரி மாதம் தீர்ப்பு வந்துவிடும்... அதைத் தொடர்ந்து நிச்சயம் ஜெயலலிதா சிறைக்கு செல்வார் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான்.. தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்துதான் போட்டியிட வேண்டும். என்னுடைய இந்த கருத்தை கட்சியின் செயற்குழுவில் தெரிவிப்பேன்.

Jayalalithaa will go to jail in asset case, says Subramanian Swamy

தமிழகத்தில் இந்து மறுமலர்ச்சிக்காகவும் ஊழலை ஒழிப்பதற்காகவும் மக்கள் பாரதிய ஜனதா கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விவாதம் வரும் 23-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. அனேகமாக அடுத்த பிப்ரவரியில் தீர்ப்பு வந்துவிடும். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+