தமிழக மீனவர்கள் தொடர் கைது: பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெ. கடிதம்
Tamilnadu
oi-Jaya
By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் 80 பேர் மற்றும் அவர்களது படகுகள் இலங்கை வசம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க தூதர் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல இலங்கை படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதை பிரதமர் உடனடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Chief Minister Jayalalithaa on Saturday urged Prime Minister Manmohan Singh to take suitable action to get all fishermen of Tamil Nadu, who are now in custody of the Sri Lankan authorities, released immediately along with the 80 fishermen who were already languishing in jails of the island nation.