போர்க்குற்ற விசாரணை... பேரவைத் தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை : இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது...

இலங்கையில் இறுதி கட்ட போரின் போது இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி தாங்கள் அறிவீர்கள். இது குறித்த ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்த தீர்மானம் பற்றி 1.10.2015 மற்றும் 2.10.2015 ஆகிய தேதிகளில் விவாதிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் இது பற்றி நிலவும் பொதுக்கருத்தை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவையில் விவாதம் மேற்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் போர்க்குற்றங்கள் மற்றும் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசு செய்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசு வலியுறுத்துமாறு தமிழக அரசு கேட்டுக் கொள்கிறது.
தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாக மேலும் நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்...
'இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும்.
அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற இந்தியா ராஜதந்திரி ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்வைத்தார். இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
-
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications