ஜெ. மரணத்தில் மர்மமா? சு.சாமி பேட்டி

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஒரு போதும் அக்கறை கொண்டதில்லை என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா உடல்நிலை குறித்து அவர் அக்கறை கொண்டதே இல்லை என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்தார்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 75 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.

Jayalalithas was not aware of her health says Subramanian Swamy

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் அவரது சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவை அதிகரித்ததாகவும் தனியார் தொலைகாட்சி நடத்திய களஆய்வில் தெரியவந்தது.

இந்த கள ஆய்வு மக்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஒரு போதும் அக்கறை கொண்டதில்லை. அவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு முதலேயே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறையில் இருந்த போதும் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதை அவரது வழக்கறிஞர் பாலி நாரிமன் என்னிடம் கூறியுள்ளார். எனவே ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதான். எந்த மர்மங்களும் இல்லை என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+