இவர்கள் ஜெயேந்திரரின் 'ஆசி' பெற்றவர்கள்!
Recommended Video

காஞ்சி மடாதிபதி, மறைந்த ஜெயேந்திர சரஸ்வதிக்கு ஏராளமான அபிமானிகள் உண்டு. 'பக்தர்களு'க்கும் பஞ்சமில்லை.
நாட்டின் குடியரசுத் தலைவர் பிரதமர் தொடங்கி, ஆளுநர், முதல்வர் வரை ஜெயேந்திரரைச் சந்தித்து ஆசி பெறுவதை ஒரு கடமையாக வைத்திருந்தனர். வெளியில் சுயமரியாதை, தன்மானம் என்றெல்லாம் பேசினாலும், சட்டையைக் கழட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு சங்கர மடத்துக்குப் போய் ஜெயேந்திரர் எதிரில் தரையில் பவ்யமாய் அமர்ந்து அவரிடம் ஆசி வாங்கியவர்களும் உண்டு.
80களிலிருந்து 90 வரை பெரியவா என்றழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சங்கராச்சார்யா உயிருடன் இருந்தவரை, அமரர் இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஆர் வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா போன்றோர் சங்கர மடத்துக்குச் சென்று சங்கராச்சார்யார்களைச் சந்தித்துள்ளனர்.

பெரியவர் மறைந்த பிறகும் சங்கர மடத்துக்குச் செல்லும் விவிஐபிகள் குறையவில்லை. ஜெயேந்திரரைப் பார்க்க மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து மடத்துக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.
இப்போதைய பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பலரும் ஜெயேந்திரரிடம் ஆசி பெற்றவர்களே. குஜராத் முதல்வராக இருந்தவரை அடிக்கடி சத்தமின்றி காஞ்சி மடத்துக்கு வந்து ஆசி பெற்றுச் சென்றவர் மோடி. பிரதமரான பிறகு வருகையை நிறுத்திக் கொண்டார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயேந்திரரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். ஆனால் அவர் காஞ்சி மடம் சென்றதில்லை. பொதுவான இடத்தில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஆனால் பின்னாளில் எந்த முதல்வரும் செய்யத் துணியாத ஜெயேந்திரர் கைதை துணிச்சலாக முன்னின்று செய்து காட்டியவர் ஜெயலலிதா.
முன்னாள் மத்திய அமைச்சர் சர்ச்சை பிரமுகர் சுப்பிரமணிய சாமி, ஜெயேந்திரரின் தீவிர விசுவாசி, பக்தர். இப்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் ராம் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பல விவிஐபிகளும் ஜெயேந்திரரின் பக்தர்களாக வலம் வந்தனர்.
திரையுலகினர், பத்திரிகையுலகினர் - குறிப்பாக பத்திரிகை முதலாளிகள் - பலரும் ஜெயேந்திரருக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications