முருகனின் ஜீவசமாதி தீவிரம்.. சிறையில் 6வது நாளாக தொடர் உண்ணாவிரதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் ஜீவசமாதி அடைய விரும்பி இன்று 6வது நாளாகத் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் முருகன் இன்று 6வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் ஜீவசமாதி அடைய விருப்பம் தெரிவித்து இதனைத் தொடர்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதனிடையே, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் தான் சிறையிலேயே ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்தார்.

பழங்கள் மட்டும் உண்டு..
இதனைத் தொடர்ந்து, கடந்த 4ம் தேதியில் இருந்து முருகன் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். பின்னர் 18ம் தேதியில் இருந்து உணவு எதுவும் உட்கொள்ளாமல் விரதம் இருந்து வருகிறார். மேலும் யாரிடமும் பேசாமல் மவுனவிரதமும் இருந்து வருகிறார்.

பிரதமருக்குக் கடிதம்
இதனைத் தொடர்ந்து, தான் உண்ணாவிரதம் இருப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முருகன் கடிதம் எழுதியுள்ளார். சிறைத்துறையின் மூலம் அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதிகாரிகள் அழுத்தம்
இதனிடையே சிறை அதிகாரிகள் விரதத்தைக் கைவிடுமாறு முருகனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் உடல் சோர்வாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

6வது நாள் உண்ணாவிரதம்
இதனைத் தொடர்ந்து, முருகன் இன்று 6வது நாளாகத் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். இதனால் அவரது ஜீவசமாதி விருப்பம் தீவிரம் அடைந்துள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications