சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு.. ஜெட்ஏர்வேஸ் பேருந்துகள் மோதி விபத்து
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு ஓடுதளத்துக்கு செல்லும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்துகள் இன்று ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓடுதளத்துக்கு செல்லும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்தில் ஓடுதளத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டும், இறக்கியும் செல்ல அந்த விமான நிறுவனங்கள் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 பேருந்துகள் 22, 23 ஓடுதளம் அருகே சென்றன.

அப்போது எதிர்பாராதவிதமாக இரு பேருந்துகளும் மோதின. இதனால் அவற்றின் கண்ணாடிகள் உடைந்தன. பேருந்துகள் காலியாக இருந்ததால் பயணிகளுக்கு காயம் ஏதும் இல்லை. இதுதொடர்பாக பேருந்துகளின் ஓட்டுநர்களிடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications