ஈரோட்டில் பரபரப்பு.. தனியாக இருந்த தலைமை ஆசிரியை வீடு புகுந்து நகைகள் கொள்ளை- வீடியோ
ஈரோடு அசோக் நகரில் தனியாக வசித்து வரும் தலைமை ஆசிரியை அமுதா வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து 30 சவரன் நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஈரோடு: ஈரோடு அசோக் நகரில் தனியாக இருந்த தலைமை ஆசிரியையின் வீட்டு ஜன்னலை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. தினம் தினம் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆனால், காவல்துறையினர் அவற்றை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுவது இல்லை என்கிற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஈரோடு அசோக் நகரைச் சேர்ந்தவர் அமுதா. இவர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட கொள்ளையர்கள் நேற்று இரவு அவர் தன்னுடைய அறையில் உறங்கிக்கொண்டிருக்கும் போது, மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
காலையில் எழுந்து பார்த்த தலைமை ஆசிரியை, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications