தற்கொலை செய்ய விரும்புபவர்கள் வாசனுடன் கூட்டணி வைக்கலாம்-ஈவிகேஎஸ் இளங்கோவன்
தஞ்சாவூர்: வாசன் அணியில் சேர்வது என்பது தற்கொலைக்குச் சமமானது என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் நேற்று நடைபெற்ற, சிறு பான்மையினர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜி.கே.வாசன், ‘வரும் சட்டசபைத் தேர்தலின் போது, தமிழகத்தில் எங்கள் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அப்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
'வாசன் அணியில் சேர்வது என்பது தற்கொலைக்கு சமமானது. பா.ஜ., ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது எனும் இடத்தில் தடுப்பணை கட்டக்கூடாது என்பதை நேரில் சென்று வலியுறுத்துவோம். அதையும் மீறி அந்த திட்டத்தை செயல்படுத்த முயன்றால், எங்களின் முழு சக்தியையும் கொண்டு அதை தடுப்போம்,' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications