ஜோதிமணி தனித்துப் போட்டியிட்டால் வரவேற்போம்... சொல்கிறார் குஷ்பு!
சென்னை: அரவக்குறிச்சி தொகுதியை தனக்கு ஒதுக்காததால், ஜோதிமணி தனித்துப் போட்டியிட்டால் அதனை வரவேற்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸிற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பற்றிய விபரம் நேற்று வெளியிடப்பட்டது.

இதில், அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வேட்பாளராகும் கனவில் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸைச் சேர்ந்த கரூர் ஜோதிமணி அதிர்ச்சியடைந்தார்.
அதோடு, காங்கிரஸ் தனக்காக அந்தத் தொகுதியை கேட்டு வாங்கவில்லை என கட்சி மேலிடம் மீதும் ஜோதிமணிக்கு கோபம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அத்தொகுதியில் தனித்துப் போட்டியிடுவது என அவர் முடிவெடுத்துள்ளார்.
ஏற்கனவே, கோஷ்டிப் பூசலுக்கு பஞ்சமில்லாத காங்கிரஸில், இந்த அரவக்குறிச்சி விவகாரம் புதிய பிரச்சினையாக முளைத்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு, வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "திமுக கூட்டணியில், காங்கிரஸ் வெற்றி பெற்ற சிட்டிங் தொகுதிகளையும், நாங்கள் வலுவாக இருக்கும் தொகுதிகளையும் ஒதுக்கியிருக்கிறார்கள். கட்சிகளின் சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுத்துவிட வேண்டும் என முன்பே பேசி முடிவு செய்துவிட்டோம்.
ஜோதிமணி கேட்கும் தொகுதியில் பழனிச்சாமி என்பவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தலைமையின் முடிவுக்கு எதிராக தனித்து போட்டியிட விரும்பினால், ஜோதிமணி தாராளமாக தனித்துப் போட்டியிடட்டும். அதனை நாங்கள் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி, வேட்பாளர் பட்டியல் போன்றவற்றால் மற்ற கட்சிகள் பிரச்சினைகளை சந்தித்து வரும் வேளையில், காங்கிரஸில் இந்த அரவக்குறிச்சி தொகுதி விவகாரம் பூதாகரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications