தமிழகத்துக்கு ஒரு சட்டம், புதுச்சேரிக்கு ஒரு சட்டமா? ஹைகோர்ட் தீர்ப்பு குறித்து ஜோதிமணி நறுக்
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி டிவிட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி டிவிட்டியுள்ளார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் எம்எல்ஏக்களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்றால் எப்படி புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியும்? தமிழகமும்,புதுவையும் இந்தியாவில் தானே இருக்கின்றன?
— Jothimani (@jothims) April 27, 2018
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்றால் எப்படி புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியும்? தமிழகமும்,புதுவையும் இந்தியாவில் தானே இருக்கின்றன? இவ்வாறு ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் தீர்ப்பு குறித்து விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications