என்னாது கண் திருஷ்டியால் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்ததா?.. அப்ப சுத்தி போடுங்க.. வாரும் ஜோதிமணி
சென்னை: முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்ததற்கு கண் திருஷ்டியே காரணம் என்று கூறிய அமைச்சர் உதயகுமாரை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி கிண்டல் அடித்துள்ளார்.
விருதுநகரில் அரசு நலத்திட்ட விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில் பலரின் கண் திருஷ்டி காரணமாக முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்துவிட்டன என்றார் அவர்.

இதற்கு சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துகள் குவிகின்றன. அமைச்சரை கிண்டல் செய்து நெட்டிசன்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் முன்னணி தலைவர் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சரின் செய்தியை சுட்டிக் காட்டி கூறுகையில் அப்ப சுத்திப் போடுங்க சரியாப் போயிரும்! இவுங்களையெல்லாம் ஒரு அமைச்சர்னு வெச்சுக்கிட்டு என்ன செய்ய ?! என்று கேட்டுள்ளார்.
அப்ப சுத்திப் போடுங்க சரியாப் போயிரும்! இவுங்களையெல்லாம் ஒரு அமைச்சர்னு வெச்சுக்கிட்டு என்ன செய்ய ?! pic.twitter.com/ViEkjuHsA5
— Jothimani (@jothims) September 2, 2018
சுத்தி போடுங்கள் என்று அமைச்சரை கிண்டல் செய்த ஜோதிமணியை , மேடம் நீங்களுமா என அவரது பாலோயர்கள் கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications