அதிகாரிகள் லஞ்சம்.. பெருகும் விதிமீறல் கட்டடம்.. சிஎம்டிஏவை ஏன் கலைக்க கூடாது: நீதிபதி சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்வதால் விதிமீறல் கட்டடங்கள் பெருகுகிறது. சிஎம்டிஏவை ஏன் கலைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பினார்.

நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 6 மாடி கட்டடத்துக்கு சீல் வைக்க வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

Judge Vaidiyanathan asks that why dont we abolish the CMDA department?

அப்போது வழக்கில் மாநகராட்சி இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் செல்வநாதன், உதவி ஆணையர் முத்துபாண்டி ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் தரப்பில் சீல் வைக்க சென்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு போலீஸார் பாதுகாப்பு தரவில்லை என குற்றச்சாட்டும் எழுந்தது.

அப்போது நீதிபதி பேசுகையில், சிஎம்டிஏவை ஏன் கலைக்கக் கூடாது? வீதிமீறல் கட்டடங்களை தடுக்க தவறிய சிஎம்டிஏவை ஏன் கலைக்கக் கூடாது.

2015 வெள்ளத்தில் இருந்து அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஆக்கிரமிப்பாளர்களிடம்அதிகாரிகள் பணம் பெறுவதால் விதிமீறல் கட்டடங்கள் பெருகுகின்றன

நேற்று பெய்த ஒரு நாள் மழைக்கே சென்னை மிதந்தது. பெருநகர மாநகராட்சியின் புதிய பகுதிகளில் விதிமீறல்களை எப்படி தடுக்க போகிறீர்கள்? சென்னை மாநகராட்சி ஆணையர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், மின் வாரிய தலைவர் ஆகியோர் ஜூலை 16-இல் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+