வெளியில வச்சுதான்டா உன்ன செய்யனும்... பிக்பாஸில் ஆரவை தரலோக்கலாக மிரட்டிய ஜூலி!
வெளியில் வச்சுதான் உன்னை செய்யனும் என ஜூலி மிரட்டியதாக ஆரவ் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவை பார்த்து உன் மீது பெரும் கோபத்தில் உள்ளேன் வெளியில் வந்தபின் வச்சு செய்கிறேன் என ஜூலி மிரட்டியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி நாளுக்கு நாள் படுமோசமாக நடந்துகொள்கிறார். அவரது உண்மை முகம் வெளிப்படுவதால் அவர் மீதான வெறுப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அழுதே காரியத்தை சாதிப்பது, பற்றவைப்பது, முதுகுக்குப் பின்னால் குத்துவது, நடக்காத ஒன்றை நடந்ததாக பில்டப் செய்வது என கற்று வைத்திருக்கும் வித்தைகளையெல்லாம் களம் இறக்கிவருகிறார் ஜூலி.

ஜூலியின் முகத்திரை கிழிப்பு
ஓவியா சொல்லாததை எல்லாம் மற்றவர்களிடம் சொல்லி ஓவியாவை ஓரம் கட்டி வேடிக்கை பார்த்தார் ஜூலி. ஆனால் நடந்ததை குறும்படமாக வெளியிட்டு அவரது முகத்திரையை கடந்த வாரம் கிழித்தார் நடிகர் கமல்ஹாசன்.

ஆரவை காதலித்த ஜூலி
இதனால் பிக்பாஸ் குடும்பத்தில் சக்தி, காயத்ரி, சினேகன் தவிர மற்ற அனைவரும் அவரிடம் இருந்து விலகியே உள்ளனர். அண்மையில் ஆரவை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என தோன்றுகிறது, அவரை காதலிக்கிறேன் என நினைக்கிறேன் என காயத்ரியிடம் ஜூலி கூறினார்.

உண்மையை கூறிய ஆரவ்
காயத்ரியும் மிக நேர்மையாக அந்த ரகசியத்தை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் ஜூலி செய்த காரியங்கள் எல்லாம் வெளியே வந்தபிறகு ஆரவ், ஓவியா ஏதும் பேசவில்லை அது தனக்கும் தெரியும் என்ற உண்மையை கூறினார்.

கோபமாக மாறிய ஜூலியின் காதல்
இதனால் ஆரவ் மீதான ஜூலியின் காதல் கோபமாக மாறியுள்ளது. கடந்த வாரம் நாமினேஷனின் போதும் ஜூலி ஆரவ் பெயரை நாமினேட் செய்தார். ஆரவ் பார்ஷியலாக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.
வெளியில வச்சு செய்றேன்
இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் புரமோவில் ஆரவ், வையாபுரியிடம் ஜூலி தன்னை மிரட்டுவதாக ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறார். அதாவது, உன் மேல் செம கோபத்தில் உள்ளேன் உன்னை வெளியில் வைத்துதான் செய்யவேண்டும் என ஜூலி மிரட்டியதாக அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications