சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த நீதிபதி இந்திரா பானர்ஜி, தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் சென்னை வந்து பதவியேற்பார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த எஸ்.கே.கவுல்,உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.
இதையடுத்து நீதிபதி ஹெச்.ஜி ரமேஷ் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டுவந்தார். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வரும் இந்திரா பானர்ஜியை,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் தேர்ந்தெடுத்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் இந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு வாரங்களில் பதவி ஏற்பார்.
இந்திரா பானர்ஜி, 1985ஆம் ஆண்டு, கொல்கத்தா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 17 வருட வழக்கறிஞர் அனுபவத்துக்குப் பிறகு, 2002ஆம் ஆண்டு கொல்கத்தா திமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்.
அதன்பிறகு, 2016 ஆகஸ்டு மாதம் முதல் டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். கொலீஜியத்தின் பரந்துரையின் பேரில் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி விரைவில் பதவியேற்பார்.