உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் எதிர்ப்பு- நாட்டை விட்டு வெளியேறப் போவதாக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய நீதிபதி கர்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஜாதிவெறியுள்ள இந்த நாட்டை விட்டு தாம் வெளியேறப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அடிபடுபவர். நீதித்துறை பணியிடங்கள் விவகாரத்தில் இவர் பிறப்பித்த தடை உத்தரவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

Justice Karnan opposes SC order

இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் முறையிட்டார். இந்நிலையில் நீதிபதி கர்ணனனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் இடம் மாற்றம் செய்தார். இதற்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்க கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றம் எனக்கு எதிராக பிறப்பித்துள்ள உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நான் தலித் என்பதாலேயே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜாதிவெறியுள்ள இந்த நாட்டை விட்டு நான் வெளியேறப் போகிறேன் என கூறினார்.

Madras High court Justice C S Karnan opposed the SC order against him.

தமக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய நீதிபதி கர்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஜாதிவெறியுள்ள இந்த நாட்டை விட்டு தாம் வெளியேறப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+