விசாரணை 2 மாதத்தில் முடிக்கப்படும்... 11 மாடிக் கட்டிட விபத்து இடத்தை நேரில் ஆய்வு செய்த நீதிபதி ரகு
சென்னை: கட்டிடத் தொழிலாளர்கள் 61 பேரின் உயிரைக் குடித்த சென்னை 11 மாடிக் கட்டிட விபத்து நடந்த இடத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் இடியுடன் பெய்த கனமழையில், போரூர் மவுலிவாக்கம் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டிட விபத்து எனக் கூறப்படும் இந்த விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று நீதிபதி ரகுபதி பார்வையிட்டு வருகிறார். மேலும், விபத்து குறித்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் வசிப்போரிடம் அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணையின் இடையே இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நீதிபதி ரகுபதி கூறியதாவது :-
மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டட விதிமீறல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும். விசாரணையை 2 மாதத்திற்குள் முடித்து அரசிடம் அறிக்கை அளிக்கப்படும். மேலும், கட்டட இடிபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை ஆணையத்தில் முறையிடலாம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications