விசாரணை 2 மாதத்தில் முடிக்கப்படும்... 11 மாடிக் கட்டிட விபத்து இடத்தை நேரில் ஆய்வு செய்த நீதிபதி ரகு
சென்னை: கட்டிடத் தொழிலாளர்கள் 61 பேரின் உயிரைக் குடித்த சென்னை 11 மாடிக் கட்டிட விபத்து நடந்த இடத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் இடியுடன் பெய்த கனமழையில், போரூர் மவுலிவாக்கம் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டிட விபத்து எனக் கூறப்படும் இந்த விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று நீதிபதி ரகுபதி பார்வையிட்டு வருகிறார். மேலும், விபத்து குறித்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் வசிப்போரிடம் அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணையின் இடையே இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நீதிபதி ரகுபதி கூறியதாவது :-
மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டட விதிமீறல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும். விசாரணையை 2 மாதத்திற்குள் முடித்து அரசிடம் அறிக்கை அளிக்கப்படும். மேலும், கட்டட இடிபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை ஆணையத்தில் முறையிடலாம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications