90 வயதாகியும் நாட்டிற்கு உழைக்கும் தலைவர் நல்லக்கண்ணு – நீதிபதி வெ.ராமசுப்ரமணியம்
சென்னை: தன்னுடைய 90 வயதிலும் நாட்டிற்காக அயராது பாடுபடுபவர் ஆர்.நல்லக்கண்ணு என்று நீதிபதி வெ.ராமசுப்ரமணியம் புகழாரம் சூட்டியுள்ளார்.
நீதிநாயகம் சிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை சார்பில், மனித உரிமை மற்றும் சமூக நீதிக்கு போராடிய மாமனிதர்களுக்கான "நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் விருது" வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, சென்னை ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகியோருக்கு "நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் விருது-2015" விருதுகளை சென்னை ஹைகோர்ட் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியம் வழங்கினார்.
வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கான விருதினை அவரது சகோதரரும் முன்னாள் டி.ஜி.பி.யுமான வி.ஆர்.லட்சுமி நாராயணன் பெற்றுக்கொண்டார்.
விருதுகளை வழங்கி வெ.ராமசுப்பிரமணியம், "தனது 90 வயதிலும், நாட்டிற்காக அயராது பாடுபடுபவர் ஆர்.நல்லக்கண்ணு. அவரது எளிமையை பற்றி சொல்வதானால் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நல்லக்கண்ணுக்கு 3 ஆவது வகுப்பு ஏ.சி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், ரயில் புறப்படும் நேரம் வரை அவர் தனது சீட்டிற்கு செல்லவில்லை.
அப்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை காணவில்லையே என்று நினைத்து தேடியபோது, நல்லக்கண்ணு சாதாரணமாக தான் பயணிக்கும் பொதுப்பெட்டி அருகே நின்று கொண்டிருந்தாராம்.
பின்னர், அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைக்கு அழைத்து சென்றுள்ளனர். எளிமையை வியாபாரம் செய்பவர்களும் இந்தியர்கள் தான்.
ஆனால், எளிமை உள்ளத்தின் உள்ளுக்குள் இருந்து தானாக உருவாவது என்று செயலில் காட்டியவர் ஆர்.நல்லக்கண்ணு" என்று தெரிவித்துள்ளார்.
-
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications