For Daily Alerts
Just In
இன்று மாலை 3 மணிக்கு கே பாலச்சந்தரின் இறுதிச் சடங்கு
சென்னை: மறைந்த திரையுலக சாதனையாளர் கே பாலச்சந்தரின் உடல் இன்று மாலை 3 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் கே பாலச்சந்தர் நேற்று மரணமடைந்தார்.
கே பாலச்சந்தருக்கு இந்தியத் திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது. அரசியல், சமூகப் பிரமுகர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகலுக்குப் பிறகு நடக்கின்றன. மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாலை 3 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
Comments
English summary
It is a grieving moment for one and all for losing the most prestigious icon of Indian Cinema. K Balachandar. His final funeral rites will be held around 3 p.m. today at Besant Nagar Crematorium
Story first published: Wednesday, December 24, 2014, 11:50 [IST]