தண்ணீரு தண்ணீருன்னு கேட்டா.. பன்னீரு பன்னீருன்னு சொல்லுது விவஸ்த கெட்ட பாஜக.. வீரமணி காட்டம்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைக்காத பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசினார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

போராட்டம்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், திமுக சார்பில் ஆர். எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினார்கள்.

துரோகம்
இந்தப் போராட்டத்தில் கி. வீரமணி பேசியதாவது: உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்தத் உத்தரவையும் புறந்தள்ளி மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது.

தண்ணீர் தண்ணீர்
தமிழகத்திற்கு தண்ணீர் தண்ணீர் என்று கேட்டால் பன்னீர் பன்னீர் அங்கே போங்கள் என்று சொல்லக் கூடிய விவஸ்தை கெட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து தமிழகத்திற்கும் விவசாயிகளுக்கும் பாஜக துரோகம் செய்து வருகிறது.

திருப்பம்
இது வேடிக்கைக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. வம்மு செய்வதற்காகவும் அல்ல. நாட்டின் மானத்தை, உரிமையை காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் போராட்டம். இது முடிவல்ல. தொடக்கம். நல்ல புரட்சிகரமான தொடக்கம். சரித்திரத்தில் திருப்பம் இருக்கக் கூடிய தொடக்கம் என்று வீரமணி கூறினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications