மோடி சர்க்காரின் 66 "நாயன்மார்களின்" பின்னணி இதுதான்.. கி. வீரமணி
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்ச்சரவையில் உயர்ஜாதியினர், குற்றப் பின்னணி உடையவர்கள், கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டிருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீர்மணி கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் மோடியின் அமைச்சரவை - 165 நாட்களுக்குப்பின் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பல ஆங்கில நாளேடுகளின் செய்தி விளக்கத் தகவல்களின்படி இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படும் ஓர் அரசு என்பதால், அவர்களது ஆணைப்படியும் பலர் உள்ளே நுழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி வித்தையின் ஒரு பகுதியாக ஆளுமையை அதிகப்படுத்தி நடத்தும் அரசாக எங்கள் அரசு அமையும் என்று கூறி, வாக்கு வங்கியிடம் தீவிரப் பிரச்சாரத்தைச் செய்தது - இவ்வளவு குறுகிய காலத்திலேயே காற்றில் பறந்து விட்டது. இதைப் பல ஏடுகளும் கூடச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
முதலாவதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சரவையில் குற்றப் பின்னணி உள்ளவர்களையெல்லாம் சேர்த்துள்ளனர்; இப்போது நீட்டப்பட்டுள்ள இந்த 66 பேர்களைக் கொண்ட அமைச்சரவையில் சுமார் 13 பேர்களுக்கு மேல் கொலை வழக்கு உட்பட பல்வகைக் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டு பதவியேற்றுள்ளனர்!
‘இங்கு யாருக்கும் வெட்கமில்லை' என்ற கவிதை வரிகளுக்கு ஏற்ப, பிரதமர் மோடியின் ராஜ்யபாரம் துவங்கி விட்டது!
வெளியுறவுத்துறை முதற்கொண்டு பல அணுகுமுறையில், முந்தைய காங்கிரசின் தலைமையில் நடந்த அரசே பரவாயில்லை, என்றும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை, தமிழக மீனவர் பிரச்சினையில் மிக மோசமான கொடுமையே தொடருகிறது என்றும் அவர்தம் கூட்டணியில் இடம் பெற்று, எப்போது வெளியே வந்து, தமது தவறுக்குக் ‘கழுவாய்' தேடலாம் என்று கருதுகின்ற அவர்தம் தோழமைக் கட்சிகளே புலம்பிக் கொண்டிருக்கின்றன. வெளியேறத் துடித்துக் கொண்டுள்ளன!
‘மோடியை எதிர்ப்பவர்களுக்கு இங்கே வேலையில்லை; பாகிஸ்தானுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள்' என்று தேர்தல் நேரத்தில் பகிரங்கரமாய்ப் பேசி, அதனால் தேர்தல் சட்ட விதிகளின்படி கிரிமினல் செக்ஷன்கள் கீழ் வழக்கில் சிக்கிய பீகார் கிரிராஜ் போன்ற பூமிகார் என்ற உயர் ஜாதி பார்ப்பன வகுப்பாளர்கூட புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
165 நாள்களில் உண்மை - நிறம் வெளுத்து வெளியே வரும் நிலை! பீகாரில் மற்ற சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரும் நிலையைக் கவனித்தே பல பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்!
ஜாட் ஜாதி, ராஜபுத்திரர்கள், பார்ப்பனர்கள் பெரிதும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். 66 பேர்களில் சிறுபான்மையினர் முஸ்லீம்கள் இரண்டு பேர்களே! தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களும் சிலரே. கட்சி மாறியதற்கான பரிசுகளாகவே அமைச்சர் பதவி தரப்பட்டுள்ள விசித்திரமும் உண்டு!
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications