லோக்சபா துணை சபாநாயகராகும் தம்பித்துரைக்கு முதல் ஆளாக கி.வீரமணி வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிமுக உறுப்பினர் தம்பித்துரைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்களுக்கு முன்னதாக முதல் ஆளாக கி.வீரமணிதான் தம்பித்துரைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதல் தமிழக அரசியல் தலைவர் ஆவார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகராக அஇஅதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டமைக்கு, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழர் ஒருவர் இத்தகைய பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும் என்று வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications