காளை மாட்டை வைத்து கவிழ்ப்பு.. கி. வீரமணியின் எச்சரிக்கையும்... சுப்பிரமணியன் சுவாமியின் விருப்பமும்

தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தினால் பாஜக ஆதரிக்கும் என்று தமிழிசை பேசியதன் மூலம் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி நடப்பதாக எச்சரிக்கை செய்தார் கி.வீரமணி. அதற்கேற்றபடி பாஜகவின் திட்டம

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் நாட்டின் எதிர்கால அரசியலையே காளையை மாட்டின் மூலமாக கவிழ்த்து விடலாம் என்று பாஜக கருதுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார்.

இன்று காலை கி. வீரமணி, "தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் பாஜக அதனை ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும் அரசியலுக்கும் ஒரு நெருக்கடியை உருவாக்குவதற்கு இதுவே ஒரு சிறந்த திட்டமாக பாஜக உருவாக்கி இருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களைப் போன்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எழுந்துள்ளது" என்று கூறினார்.

K. Veeramani warns BJP standing on Jallikattu in TN

மேலும், இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்றும் நாட்டின் எதிர்கால அரசியலையே கூட காளை மாட்டின் மூலமாக கவிழ்த்து விடலாம் என்று பாஜகவினர் கருதுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் கி. வீரமணி எச்சரிக்கை செய்தார்.

கி. வீரமணி சொல்லியது போன்றே, பாஜகவின் திட்டம் என்ன என்பதும் அது தமிழகத்தில் என்ன செய்ய விரும்புகிறது என்பதும் தெட்டத் தெளிவாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் டுவிட்டர் பதிவு மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழக அரசைக் கலைத்து விட்டு குடியரசு ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் கனவாக இருக்கிறது. தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பாஜகவை நிலைநிறுத்திவிட முடியும் என்று அவர் நினைப்பது நடக்காது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+