களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான களக்காடு தலையணை மற்றும் நம்பிகோயில் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டண நடைமுறை முற்றிலுமாக டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டிருப்பதாக வனத்துறை தெரிவித்திருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், வனத்துறையின் நிர்வாக வெளிப்படைத்தன்மைக்காகவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

களக்காடு தலையணை
களக்காடு நகரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், அடர்ந்த வனப்பகுதியின் நுழைவாயிலில் களக்காடு தலையணை அமைந்துள்ளது. பச்சையாற்றின் குறுக்கே இயற்கையாக அமைந்த பாறை அமைப்புகளும், வனத்துறையினரால் கட்டப்பட்ட சிறிய தடுப்பணையும் சேர்ந்து இந்த இடத்தை ஒரு சிறந்த குளியல் தளமாக மாற்றியுள்ளன. தலையணை போன்ற பாறை அமைப்பில் தண்ணீர் சீராகக் கொட்டுவதால் இதற்கு 'தலையணை' என்று பெயர் வந்தது.
குற்றாலம் அல்லது பாபநாசம் போன்ற அருவிகளுடன் ஒப்பிடும்போது, இங்கு நீர்வரத்து மிதமாக இருக்கும் காலங்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பாதுகாப்பாக நீராட முடியும். எனவே சீசன் நாட்களில் இங்கு மக்கள் அதிக அளவில் கூடுகிறார்கள்.
நம்பிகோயில் மற்றும் நம்பி அருவி
அதேபோல, களக்காடு மலையின் ஆழமான பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து பல நூறு அடிகள் உயரத்தில் நம்பிகோயில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளுக்கு நடுவே, செங்குத்தான மலைப்பாதையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கோயிலுக்குச் சற்று அருகிலேயே, அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து மூலிகைக் குணங்களுடன் பாய்ந்து வரும் 'நம்பியாறு' ஒரு அழகான அருவியாக உருவெடுக்கிறது. எனவே இந்த இரண்டு இடங்களுக்கும் ஆண்டு முழுவதும் பயணிகள் வரத்து இருந்துக்கொண்டே இருக்கிறது.
இரண்டு பகுதிகளும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே சுற்றுலாப் பயணிகளிடம், இதுவரை நுழைவுச் சீட்டு மற்றும் வாகனக் கட்டணங்கள் நேரடியாக வனத்துறை சோதனைச் சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்தும் புதிய டிஜிட்டல் முறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
சோதனைச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் வாகனங்கள் வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, பயண நேரத்தைக் குறைக்கவும் என்பதாலும், வனத்துறையினரின் கணக்குகள் துல்லியமாகப் பராமரிக்கப்படும் என்பதாலும் தற்போது கண்டன வசூல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications