இந்தியாவின் "அக்னி" யாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் - வெங்கய்யா பெருமிதம்
இந்தியாவின் அக்னியாக திகழ்ந்தவர் அப்துல்கலாம் அவருக்கு எனது சலாம் என்று உணர்ச்சி பொங்க புகழாரம் சூட்டியுள்ளார் வெங்கய்யா நாயுடு.
ராமேஸ்வரம்: இந்தியாவின் அக்னியாக திகழ்ந்தவர் கலாம். நம் நாட்டு மக்களுக்காக கலாம் அக்னி சிறகுகளை அளித்து விட்டு சென்றிருக்கிறார் அவருக்கு எனது சலாம் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
வடக்கே காசி தெற்கே ராமேஸ்வரம் புண்ணிய பூமிகள். டெல்லி காந்தி நினைவிடம் போல ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடமும் அனைவராலும் வந்து செல்லக்கூடிய இடம் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, வெங்கைய நாயுடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பேசிய வெங்கயா நாயுடு, முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், சிற்நத விஞ்ஞானி மட்டுமல்ல சிறந்த மனிதராவார்.
அப்துல் கலாம், ஜெயலலிதா என்ற இரு முக்கிய ஆளுமைகளை நாம் இழந்து விட்டோம். கடவுளுக்கு கருணையில்லை. காந்திஜியின் யுகத்திற்கு பின் தற்போது கலாமின் யுகம் தான் இளைஞர்களுக்கு எழுச்சியை ஊட்டியவர். அப்துல் கலாமி்ன் கனவுகளை நனவாக்க பிரதமர் மோடி பாடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மறைந்தாலும் நம் மனதில் சாகா வரம் பெற்றவர் அப்துல் கலாம். இந்தியாவின் அக்னியாக திகழ்ந்தவர் கலாம். நாட்டு மக்களுக்காக கலாம் அக்னி சிறகுகளை அளித்து விட்டு சென்றிருக்கிறார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்ற அவர், அனைத்து துறைகளிலும் இந்தியா வல்லரசாக ஆலோசனைகளை வழங்கியவர் அப்துல் கலாம்.
வடக்கே காசியைப் போல தெற்கே ராமேஸ்வரம் புனித பூமி. டெல்லி காந்தி நினைவிடத்திற்கு அடுத்து சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் வந்து செல்லக் கூடிய இடமாக கலாம் மணிமண்டபம் இருக்கும் என்றார்.
மிகச்சிறந்த மனிதராக அப்துல்கலாமை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications