இந்தியாவின் "அக்னி" யாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் - வெங்கய்யா பெருமிதம்
இந்தியாவின் அக்னியாக திகழ்ந்தவர் அப்துல்கலாம் அவருக்கு எனது சலாம் என்று உணர்ச்சி பொங்க புகழாரம் சூட்டியுள்ளார் வெங்கய்யா நாயுடு.
ராமேஸ்வரம்: இந்தியாவின் அக்னியாக திகழ்ந்தவர் கலாம். நம் நாட்டு மக்களுக்காக கலாம் அக்னி சிறகுகளை அளித்து விட்டு சென்றிருக்கிறார் அவருக்கு எனது சலாம் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
வடக்கே காசி தெற்கே ராமேஸ்வரம் புண்ணிய பூமிகள். டெல்லி காந்தி நினைவிடம் போல ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடமும் அனைவராலும் வந்து செல்லக்கூடிய இடம் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, வெங்கைய நாயுடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பேசிய வெங்கயா நாயுடு, முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், சிற்நத விஞ்ஞானி மட்டுமல்ல சிறந்த மனிதராவார்.
அப்துல் கலாம், ஜெயலலிதா என்ற இரு முக்கிய ஆளுமைகளை நாம் இழந்து விட்டோம். கடவுளுக்கு கருணையில்லை. காந்திஜியின் யுகத்திற்கு பின் தற்போது கலாமின் யுகம் தான் இளைஞர்களுக்கு எழுச்சியை ஊட்டியவர். அப்துல் கலாமி்ன் கனவுகளை நனவாக்க பிரதமர் மோடி பாடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மறைந்தாலும் நம் மனதில் சாகா வரம் பெற்றவர் அப்துல் கலாம். இந்தியாவின் அக்னியாக திகழ்ந்தவர் கலாம். நாட்டு மக்களுக்காக கலாம் அக்னி சிறகுகளை அளித்து விட்டு சென்றிருக்கிறார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்ற அவர், அனைத்து துறைகளிலும் இந்தியா வல்லரசாக ஆலோசனைகளை வழங்கியவர் அப்துல் கலாம்.
வடக்கே காசியைப் போல தெற்கே ராமேஸ்வரம் புனித பூமி. டெல்லி காந்தி நினைவிடத்திற்கு அடுத்து சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் வந்து செல்லக் கூடிய இடமாக கலாம் மணிமண்டபம் இருக்கும் என்றார்.
மிகச்சிறந்த மனிதராக அப்துல்கலாமை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் வெங்கய்யா நாயுடு கூறினார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications