டிவி பார்ப்பதை குறையுங்கள்... வீட்டுக்கு வீடு நூலகம் திறங்கள்... கலாம் கொடுத்த கடைசி அட்வைஸ்!
மதுரை: வீட்டுக்கு வீடு நூலகம் திறக்க வேண்டும் என்பது தான் மதுரையில் கடைசியாக கலந்து கொண்ட விழாவில் அப்துல் கலாமின் வேண்டுகோளாக இருந்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில், மாணவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டவர் அப்துல்கலாம். அவரது கடைசி நிமிடங்களும் கூட மாணவர்கள் மத்தியில் தான் அமைந்தது.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி தொழில்வர்த்தக சங்க நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். அங்கு ‘டிஜிட் ஆல்' கணினி தொழில் நுட்ப பிரிவை தொடங்கி வைத்த கலாம் தொழில் முனைவோர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
ஊரணிக்கு உயிர் கொடுப்போம் திட்டத்தின்கீழ் தென் மாவட்டங்களில் கண்மாய்களை சுத்தப்படுத்த சங்கத்தினர் முன்வர வேண்டும். தொழில் முனைவோருக்கு இணைய தள பயன்பாடு அவசியம்.
பெற்றோர் டி.வி. பார்ப்பதை தினமும் ஒரு மணி நேரம் குறைத்து குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும். வீட்டுக்கு வீடு நூலகங்கள் திறக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
கலாமின் கடைசி ஆசையை நாம் நிறைவேற்றுவோமா..?












Click it and Unblock the Notifications