போளூரில் கலசப்பாக்கம் எம்எல்ஏவுக்கு "பளார்" விட்ட வசந்தமணி கைது
போளூரில் கலசப்பாக்கம் எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த வசந்தமணி கைது செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திருமண விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,வுக்கு கன்னத்தில் அறை- வீடியோ
போளூர்: போளூரில் திருமண விழாவில் கலந்து கொண்ட கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர் செல்வத்தின் கன்னத்தில் அறைந்த வசந்தமணி என்பவர் கைது செய்யப்பட்டார்.
கலசப்பாக்கம் எம்.எல்.ஏவாக இருப்பவர் பன்னீர் செல்வம். இவர் இன்று போளூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரது காலில் விழ வசந்தமணி என்பவர் வந்தார். அவர் யாரும் எதிர்பார்க்காத வேளையில் எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்தார்.

உடனிருந்த போலீசார் வசந்தமணியை கைது செய்தனர். மேலும் பன்னீர் செல்வத்தின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications