கள்ளக்குறிச்சியை கதிகலங்க வைத்த கண்ணுக்குட்டி..சாராயம் குடித்து மேலும் ஒரு பலி! வெளியான ஷாக் தகவல்.!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மது குடித்து உயிரிழந்த தங்கராசு மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் உயிரிழந்ததாக உடற்கூறாய்வில் தகவல் வெளியாகி உள்ளது. தங்கராசுவின் மரணம் மர்மமாக இருப்பதாக வெளியான தகவலை அடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான கண்ணுகுட்டி, தாமோதரன் ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, பரமசிவம் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், கண்ணுக்குட்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர்கள் மீது 13 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர்களது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு கள்ளச்சாராய மரணம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி கடலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த தங்கராசு, கள்ளக்குறிச்சி அருகே உயிரிழந்து கிடந்தார். தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது ரத்த மாதிரி சோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் சந்தேக மரணம் என கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் உடற்கூறு ஆய்வு அறிக்கைகளும், ரத்த மாதிரி சோதனை அறிக்கையின் அடிப்படையிலும் தங்கராசு மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் உயிரிழந்தது தெரிய வந்தது. கண்ணுக்குட்டி, தாமோதரன் ஆகியோரிடம் சாராயம் வாங்கி குடித்ததால் தான் தங்கராசு உயிரிழந்தார் என்பதை போலீசாரும் உறுதி செய்தனர்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் விவகாரத்தில் கடலூர் மத்திய சிறையில் கண்ணு குட்டி தாமோதரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது பணம் சம்பாதிக்கும் நோக்கில் குற்றம் செய்தது, மரணம் விளைவிக்கும் என தெரிந்தும் குற்றம் செய்தது, விஷ நெடியுடன் சாராயம் விற்பனை செய்தது, மெத்தனால் கலந்து சாராயம் விற்பனை ஆகிய நான்கு பிரிவுகள் வழக்கு பதிவு செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் இருக்கும் நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இருவரும் கடலூர் மத்திய சிறையில் இருந்து கள்ளக்குறிச்சி அழைத்து வரப்பட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் நான்காம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கள்ளச்சாராயம் மரணத்தில் 68 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அதே சம்பவத்தின் மூலம் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications