For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதட்டுவதற்கு உரிமை இருக்கிறது.. பேச விடாமல் கைதட்டிய ரசிகர்களிடம் கோபப்பட்ட கமல்ஹாசன்

தூத்துக்குடியில் கமல்ஹாசன் பேசிக்கொண்டு இருந்த போது, அவரை பேச விடாமல் ரசிகர்கள் கைதட்டியதை பார்த்து கமல்ஹாசன் கோபப்பட்டுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கமல்ஹாசன் பேசிக்கொண்டு இருந்த போது, அவரை பேச விடாமல் ரசிகர்கள் கைதட்டியதை பார்த்து கமல்ஹாசன் கோபப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் களமிறங்கி உள்ளார். போராட்ட களத்தில் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி சென்றார்.

Kamal gets angry over his fans on Sterlite protest in Tuticorin

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் என்றும் மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று குறிப்பிட்டார்.

அப்போது அவரை பேச விடாமல் ரசிகர்கள் கைதட்டிக் கொண்டே இருந்தார்கள். இன்னும் சிலர் சத்தமாக கூச்சல் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இதையடுத்து கமல் பாதியில் தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார். பேசுவது எல்லோருக்கும் கேட்கவேண்டும், அமைதியாக இருங்கள் என்று கூறினார்.

இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கமல் ''என்னுடைய ரசிகர்களிடம் செல்லாமல் கோபப்பட எனக்கு உரிமை இருக்கிறது. அவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல எனக்கு உரிமை இருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

English summary
Kamal gets angry over his fans on Sterlite protest in Tuticorin.The government didn't listen to people voice in Sterlite protest says Kamal Haasan. He extends his support to people protest in Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X