அரசியலை ட்விட்டரில் தொடங்கிவிட்டேன்... தொடங்கியது தொடங்கியதுதான்... கமல்ஹாசன்
அரசியலை தாம் ட்விட்டரில் தொடங்கிவிட்டதாகவும் அரசியலை தொடங்கியது தொடங்கியதுதான் எனவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை: அரசியலை தாம் ட்விட்டரில் தொடங்கிவிட்டதாகவும் அரசியலை தொடங்கியது தொடங்கியதுதான் எனவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை ஈச்சனாரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டிருக்கிறது.

திருடர்களை அனுமதித்தோம்
ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு திருடர்களை அனுமதித்துவிட்டோம். இந்த அரசியலை இப்படியே விட்டுவிடக் கூடாது.. தேவைப்பட்டால் கோட்டை நோக்கி புறப்படுவோம் என்றார்.

தொடர்ந்து போராடுங்கள்
மேலும் அரசியலில் அமைதியாக இருந்தால் அவமானம், தொடர்ந்து போராடுங்கள், விழித்திருங்கள் என்றார் கமல்ஹாசன். இதனைத் தொடர்ந்து கோவையில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

அரசியல் தொடங்கிவிட்டேன்
அரசியலை தொடங்கியது தொடங்கியதுதான். அரசியலை ட்விட்டரில் தொடங்கிவிட்டேன். அரசியலை ட்விட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன?

கோட்டைக்கு போவது ஏன்?
கோட்டைக்கு செல்வதை வேறு அர்த்தமாக பார்க்க வேண்டாம். தொழிலாளியுடன் கோரிக்கைகாக செல்வதைப் போன்றதுதான் கோட்டை நோக்கிய பயணம். என்னை ட்விட்டர் நாயகன் என அரசியல் கட்சிகள் விமர்சிப்பதை விமர்சனமாகவே பார்க்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications