குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம்.. கமல்ஹாசன் வருத்தம்
குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம் என்று கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம் என்று கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.

இந்தவிபத்தில் இது வரை 8 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
கருங்குணி. விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) March 12, 2018
இந்த நிலையில் தேனி காட்டு தீ குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். தற்போது கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.
அதில் ''குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications