அபிராமி அபிராமி.. கமல் சொன்ன காதல் மந்திரம்.. சுத்த அபத்தமாக்கிட்டாரே இந்த குன்றத்தூர் அபிராமி!
Recommended Video

சென்னை: அபிராமி அபிராமி என்று கமல் சொன்ன காதல் மந்திரத்தையே இன்று சுத்த அபத்தமாக்கிவிட்டார் இந்த குன்றத்தூர் அபிராமி.
கடந்த 1991-ஆம் ஆண்டு இளையராஜா இசையில், கமல்ஹாசன் நடிப்பில் குணா என்ற படம் வெளியானது. இந்த படத்தை சந்தானபாரதி இயக்கினார். ஒரு பணக்கார பெண் மீது மனநலம் பாதித்த கமலுக்கு காதல் ஏற்படும்.
அந்த பெண்ணை கடவுள் அபிராமியின் அவதாரமாகவே கமல் நினைப்பார். அவரையே திருமணம் செய்யவும் விரும்புவார். முழுக்க முழுக்க கொடைக்கானலில் இந்த படம் எடுக்கப்பட்டது.

காதலை பிரதிபலிக்கும் பாடல்
இந்த படத்தில் நடித்த கதாநாயகியின் ரோலின் பெயர் அபிராமி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடல் மிகவும் பாப்புலர் ஆனது. அந்த காலகட்டத்தில் காதலிக்கும் இளைஞர்களின் காதலை பிரதிபலிக்கும் பாடலாக இருந்தது.

ஹிட்டான அபிராமி
அதிலும் இதில் நடுநடுவே அபிராமி அபிராமி என கமல் பேசும் வசனங்களும் ஹிட். மொத்தத்தில் அபிராமி என்பது கமல் சொன்ன மந்திரமாக இருந்தது. படம் வெளியானதை அடுத்து ராமி அபிராமி என்ற சொல் மக்களிடையே வைரலானது. எங்கு பார்த்தாலும் இந்த மந்திரத்தை இளைஞர்கள் சொல்லி கொண்டிருந்தனர். அந்த கதாநாயகியின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.

கொலை
இத்தகைய காதல் மந்திரத்தின் அடையாளமாக கொண்டு அபிராமி என்ற பெயரை பெற்ற குன்றத்தூர் பெண், காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் விஜய் மனதிலும் கமலின் ராமி அபிராமி என்ற சொல் ஒலித்திருக்கும். ஆனால் அவரோ இன்று கள்ளக்காதலுக்காக தனது இரு குழந்தைகளை கொலை செய்து விட்டார்.

சுத்த அபத்தம்
அன்று காதலுக்காக கமல் சொன்ன வசனத்தை எல்லாரும் மகிழ்ச்சியாக உச்சரித்து வந்தனர். ஆனால் இன்று கள்ளக்காதலில் ஈடுபட்ட இந்த குன்றத்தூர் அபிராமியின் பெயரை கடுங்கோபத்துடன் மக்கள் உச்சரித்து வருகின்றனர். எங்கு திரும்பினாலும் அபிராமியின் பேச்சாக உள்ளது. அன்று கமல் சொன்ன காதல் வசனத்தை இன்று அபத்தமாகிவிட்டார் குன்றத்தூர் அபிராமி.












Click it and Unblock the Notifications