மெரினாவில் போராடியவர்களை கைது செய்தது அடக்குமுறை.. கமல் கடும் கண்டனம்
Recommended Video

சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களை கைது செய்தது அடக்குமுறை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது: திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பங்கேற்போம்.

காவிரிக்காக மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களை கைது செய்துள்ளது அடக்குமுறையாகும். காவிரி மேலாண்மை வாரியம் உயிர், பயிர், காலம், சம்மந்தமானது இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதனிடையே மெரினாவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு, விவசாயிகள் அமைப்பும் வரவேற்பு தெரிவித்துள்ளது. போராட்டத்திற்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications