கமல் ஒரு டிவீட்டும் போடலையே இன்னும்.. !
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நேற்று போட்ட டிவீட்டின் எபக்ட்டே மக்களை விட்டு இன்னும் போகவில்லை. ஆனால் அவர் வைத்து விட்டுப் போன சஸ்பென்ஸுக்கு என்ன அர்த்தம் என்று அவராகவே வந்து விளக்குவார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
திடீரென நேற்று கமல் போட்ட புரியாத டிவீட்டைப் புரிந்து கொள்ள அத்தனை தமிழர்களும் புலவர்களாக மாறிப் பல புத்தகங்களைப் புரட்டியும், அறிந்தவர் தெரி்ந்தவரை அணுகியும் அர்த்தம் காண முயற்சித்துப் பார்த்தனர். குத்துமதிப்பா இதுதான் அர்த்தம் என்ற தெளிவுக்கு அவர்கள் வந்து விட்டனர்.

ஆனாலும் நப்பாசை யாரை விட்டது. கமல் ஏன் அப்படிச் சொன்னார், எதற்காக சொன்னார். உண்மையிலேயே என்ன அர்த்தம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இதனால் கமல் டிவீட்டர் பக்கம் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றபடி உள்ளனர்.
ஆனால் கமல்தான் மகா மெளனமாக இருக்கிறார். நேற்று ராத்திரி போட்டு விட்டுப் போன டிவீட்டோடு சரி. அதன் பிறகு அப்டேட் இல்லை. ஒரு வேளை இன்று நள்ளிரவு, நடுச்சாமதத்தில் எழுந்தது பார் அக்னி.. அதில் உன்னை காண் நீ.. ! என்ற ரீதியில் ஏதாவது போடுவாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.
எதுக்கும் ராத்திரி சீக்கிரமே சாப்பிட்டு விட்டு சட்டுப் புட்டென்று டிவிட்டர் பக்கம் குத்த வச்சு உட்காருவோம்.












Click it and Unblock the Notifications