காவிரி.. சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும்.. கமல்ஹாசன்
சென்னை: காவிரிப் பிரச்சினை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் கருத்து வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் தனது கருத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக ஒவ்வொரு தமிழரும் வேதனையில் மூழ்கியுள்ளனர். கர்நாடகத்தில், குறிப்பாக பெங்களூரில் நடந்த பெரும் வன்முறை அனைவரைின் மனதையும் அறுத்து விட்டது. தமிழர் அல்லாதோரும் கூட இது ஏன் இப்படி ஒரு வன்முறை என்று கவலைப்படும் அளவுக்கு நடந்து கொண்டு விட்டனர் பெங்களூரு கலவரக்கார்கள்.
நம்முடன் நதி நீர்த் தாவாவில் இருந்து வரும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட இந்த கலவரம் தொடர்பாக கவலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது கருத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக்கமண்ணாடியில் முகம் பாரத்து வெட்க வேண்டி வரும்
— Kamal Haasan (@ikamalhaasan) September 14, 2016
இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்: நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது. நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.