ஊடகங்கள், மக்களின் கேள்விக்கு ஏன் பதில் தர வேண்டும் என்கிற ஆணவத்தில் ஆட்சியாளர்கள்: கமல் தாக்கு
இன்னும் சில தினங்களில் மக்கள் நீதி மய்யத்தின், மய்யம் விசில் ஆப் வெளிவரும் என்று யூ டியூப் லைவில் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: ஊடகங்கள் மற்றும் மக்களின் கேள்விகளுக்கு ஏன் பதில் தர வேண்டும் என்கிற ஆணவத்தில் ஆட்சியாளர்கள் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் மிகவும் தீவிரமாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார், அன்றாடம் நடக்கும் பிரச்சனைகளில் அவருடைய பார்வையை அவர் தெரிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் யூ டியூப் லைவில் பேசியதாவது:

அதில் ''நீர்நிலைகளை தூய்மைப்படுத்துவது பெரும் கடமை. அதுதான் தற்போதைய தண்ணீர் பிரச்சனையை பெரிய அளவில் சரிசெய்யும். சரியாக நீர்நிலைகளை பராமரிப்பதன் மூலம், நாம் தண்ணீர் பிரச்சனையில் இருந்து எளிதாக வெளியே வரலாம்'' என்று குறிப்பிட்டார்.
மேலும் ''தமிழ்நாடு முழுக்க இன்னும் நிறைய பள்ளிக்கூடங்கள் திறக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் திறந்த பின் தன்னார்வலர்கள் உதவ வேண்டும். தமிழகத்தின் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. இந்த பிரச்னையை மக்கள் நீதிமய்யம் சரிசெய்யும். '' என்றார்.
மேலும் ''வெகுவிரைவில் மய்யம்விசில் ஆப் கிடைக்கும். இதில் மக்கள் தங்கள் குறைபாடுகளை தெரிவிக்கலாம். நாட்டில் என்ன பிரச்சனை, உங்கள் பகுதியில் என்ன பிரச்சனை என்று இதில் தகவல் தெரிவிக்கலாம். இந்த அப்ளிகேஷனை உருவாக்கும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ள்ளார்.
ஆணவத்தில் ஆட்சியாளர்கள்
அத்துடன், ஊடகம் என்பது ஒரு ஆராய்ச்சி மணிதான். மக்கள், ஊடகங்களின் கேள்விக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என்ற ஆணவம் ஆட்சியாளர்களுக்கு வந்து விட்டது. இதற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications